இராஜாங்கனை பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று கால்வாயொன்றுக்குள் வீழ்ந்து இன்று (30) காலை விபத்துக்குள்ளானதில் 8 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் விபத்தின்போது, குறித்த வாகனத்தினுள் 5 பேர் இருந்துள்ளதாகவும் இராஜாங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்மார் மூவர் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது, இராஜாங்கனை, அடம்பனே பிரதேசத்திலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இக்குடும்பத்தின் இளைய மகளே உயிரிழந்துள்ளார்.
சாரதியான தந்தைக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.