சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை இந்நாட்டில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 903,467 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.