இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Rainning
Rainning

மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் கடற்கரையோர பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் ஊவா மாகாணத்தில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.