கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் கலசம் பிரதிஸ்டை செய்யப்பட்டது!

1111111111 35
1111111111 35

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஶ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கலசம் பிரதிஸ்டை செய்யும் நிகழ்வுகள் இன்றையதினம் சிறப்புற இடம்பெற்றது

அத்துடன் நாகேஸ்வரர் நாகேஸ்வரி அம்பாளின் நவநாகங்களிற்குரிய கண்கள் திறக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியில் பிரதிஸ்டைசெய்யப்பட்டதுடன், தீப பூசைகளும் இடம்பெற்றது.

சிவஶ்ரீ முத்து ஜெயந்தி நாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற பூசைநிகழ்வுகளில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஶ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் உட்பட பல்வேறு குருமார்கள் மற்றும் அடியவர்கள் கலந்து கொண்டனர்.