மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம்- அசேல குணவர்தன

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (01) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (31) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஊரில் உள்ளவர்களை மட்டும் இணைத்து சிறிய அளவில் முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.