ராஜபக்‌ஷ குடும்ப வசம் 154 அரச நிறுவனங்கள்!!!

m.rahman
m.rahman

ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துள்ள நிலையில் இதுவரையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் இல்லை.

ஆகவே யார் பாதுகாப்பு அமைச்சர் என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி ஜனாதிபதி அமைச்சு பொறுப்பை வகிக்க முடியாது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பொறுப்பின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.