வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா பிரதேசத்தில் பாதரே பியோ ஆயூள்வேத சிகிச்சை நிலையம், கூடைப்பந்து மைதானம் மற்றும் கலாசார மண்டபமும் மட்டக்களப்பு மாவட்ட யேசு சபையினரால் ஒரே இடத்தில் திறந்து வைக்கும் முப்பெரும் விழா இடம் பெற்றது.
அருட்தந்தை சகாயநாதன் (யேசு சபை) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் யேசு சபை முதல்வர் அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே, மட்டக்களப்பு மாவட்ட யேசு சபை மேலாளர் அருட் தந்தை வின்ஸ்டன் நொசாய்றோ , கத்தோலிக்க குருக்கள், துறவர சபை பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இப்பணித்தளத்தில் யேசு சபையினரால் நடாத்தப்படும் பாலர்பாடசாலை, மாலை நேர பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பாதரே பியோ ஆயூள்வேத சிகிச்சை நிலைய வைத்தியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிறுவர்களும் அதனை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் விருந்தினர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.