வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் எண்ணெய் காப்பு!

DSC 0151
DSC 0151

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு இன்று (01.04) வியாழக்கிழமை காலை 6.00 மணிமுதல் எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்றிருந்தது.

மேற்படி வைபவத்தில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு தெய்வ விக்கிரகங்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தியிருந்தனர்.

இதேவேளை நாளை 02 வெள்ளிகிழமையன்று காலை 9.00 மணி முதல் 10.15 மணிவரையான சுபவேளையில் ஆலயத்தில் குடமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது.

சிவஶ்ரீ முத்துஜெயந்தி நாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற பூசைநிகழ்வுகளில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஶ்ரீ ஐயப்பதாச, சாம்பசிவ சிவாச்சாரியார் உட்பட பல்வேறு குருமார்கள் மற்றும் அடியவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.