போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது!

kaithu
kaithu

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபர் ஒருவருக்கு துவாய் ஒன்றினுள் மறைத்து வைத்து போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு  கிடைத்த தகவலொன்றுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும், 41 கிராம் புகையிலையும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.