யாழில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

kaithu
kaithu

50 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்ததாக குடும்பத்தலைவர் ஒருவர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தே நபரிடம் கைப்பற்றப்பட்டது. அவர் காவல்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் ர் கூறினர்