நேற்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில்,முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேரும் ,உந்துருளியில் பயணித்த இருவரும்,பாதசாரிகள் ஐந்து பேரும்,பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா-ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன், தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.