வவுனியா மாவட்ட மூத்த ஊடகவியலாளர் பொ . மாணிக்கவாசகத்தின் 75 ஆவது அகவை தினத்தில் ஊடக அமையத்தினால் கௌரவிக்கப்பட்டார் .
வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்த காலத்தில் இடம்பெற்ற போரில் ஈடுபட்ட இரு தரப்பினரின் இழப்புக்கள் , மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெயர்வுகள் உட்பட களநிலைத் தகவல்களை பி.பி.சி தமிழோசை செய்தி அறிக்கை ஊடாக உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகமான மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் நேற்று அவரது இல்லத்தில் 75 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு வவுனியா ஊடக அமையத்தின் தலைவர், செயலாளர் , பொருலாளர் மற்றும் ஊடக அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது ஊடகத்துறை சார்ந்த செயற்பாடுகளுக்காக கௌரவித்து மதிப்பளிக்கப்பட்டார் .