புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள்

thumb large train
thumb large train

புத்தாண்டு காலத்தில் கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதி கருதி 21 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கவுள்ளதாக பதில் தொடருந்து பொது முகாமையாளர் டபிள்யூ. ஏ. டி. எஸ் குணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து நீண்ட தூர தொடருந்து சேவைகளும் வழமைப் போல் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை முதல் நீண்ட தூர பயணங்களுக்காக மேலும் 200 பேருந்துகளும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.