இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் யுவதியொருவர் நேற்று (02) வாத்துவ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில் வைத்து இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி பூஜாபிட்டியவைச் சேர்ந்த 29 வயதுடை பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்ட பெண் நேற்று (02) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபசாரத்துடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடி வாத்துவ காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.