காவற்துறை உத்தியோகத்தரின் கை விரலை கடித்த இளைஞன் கைது!

kaithu

காவற்துறை உத்தியோகத்தரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த காவற்துறையினருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது . தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் காவற்துறை உத்தியோகத்தரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார். 

காயத்துக்குள்ளான காவற்துறை உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்