வர்த்தகத்துறை அமைச்சர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வர்த்தகத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் மாத்திரம் 4,000 ரூபா கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
குறித்த நிதி எங்கே செல்கிறது.
இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பும் வழங்கப்படவில்லை, அத்தியாவசிய பொருட்களுக்கான விலையும் குறைக்கப்படவில்லை.
தரமற்ற உணவு பொருட்களே சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.
எனவே, வர்த்தகத்துறை அமைச்சர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.