ஈஸ்டர் தின திருப்பலி பூசைகள் வாழைச்சேனையில்!

01 1
01 1

உலகளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை  இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறும் முகமாக ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

06

அந்தவகையில் வாழைச்சேனை திரேசாள் தேவாலயத்தில் ஈஸ்டர் தின திருப்பலி பூசைகள் இடம்பெற்றது.
தேவாலய பங்குத்தந்தை நோட்டன் ஜோன்சன் தலைமையில் நள்ளிரவுத் திருப்பலி மற்றும் காலைத் திருப்பலிப் பூசைகள் யாவும் தேவாலயத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

09

 குறித்த ஈஸ்டர் தின பூசையில் பெருமளவான கிறிஸ்தவர்கள் பக்தியுடனும் சுகாதார முறைப்படியும் கலந்து கொண்டார்கள்.  திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நள்ளிரவு திருப்பலியில் ஆசீர்வதிக்கப்பட்ட ஆசீர்வாத தீர்த்தத்தையும் திருப்பலி முடிவில் பெற்றுச் சென்றார்கள்.

10


தேவாலய பங்கு தந்தையினால் மக்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இராணுவம் மற்றும் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

02