ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
உந்துருளியொன்றும், பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 22 வயதான உந்துருளி செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாரவூர்தியின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விபத்தில் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே உயிரிழந்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.