யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் இரு வாரம் சிறப்பு விடுமுறை!

1450500481 3693
1450500481 3693

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இளங்கோவன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் இரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் கடந்த வாரம் யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது.

இதன்மூலம் யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.