இலங்கையில் நேற்றைய தினம் (05) அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்றுக்குள்ளான 159 பேரில் பெரும்பாலானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களின் எண்ணிக்கை 56 ஆகும். இரத்தினபுரியில் 31 பேரும், கம்பாஹாவில் 14 பேரும், அனுராதபுரத்தில் 09 பேரும், யாழ்ப்பாணத்தில் 06 பேரும், முல்லைத்தீவில் 06 பேரும் மற்றும் வவுனியாவில் 05 பேரும் நேற்றைய தினம் (05) வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக பதிவாகியுள்ளனர்.
களுத்துறையில் 04 பேரும், மன்னாரில் 04 பேரும் மற்றும் மட்டக்களப்பிலிருந்து 02 பேரும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.
ஏனைய 22 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.