சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சித்திரைப் புத்தாண்டு சுபநேர பத்திரம்!

the nation
the nation

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேர பத்திரம் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புதுவருடப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.