இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 177 பேரில் 31 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 29 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 22 பேர், குருணாகல் மாவட்டத்தில் 12 பேர் மற்றும் கண்டி மாவட்டத்தில் 08 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 05 பேர் , நுவரெலியா மாவட்டத்தில் 05 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 04 பேர் , காலி, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை, பதுளை, புத்தளம், அனுராதபுரம், மட்டக்களப்பு, திரு கோணமலை, வவுனியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 19 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.