யாழ் நகரில் அரச பேருந்து சேவை யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் செயற்படத் தொடங்கியுள்ளது. எனினும் காவல்துறையினர் குறித்த செயற்பாட்டுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக இன்று வரை பேணப்பட்டு வந்த நடைமுறையினை இலங்கை போக்குவரத்து சபையினர் மீறி விட்டதாகவும் சுகாதாரப் பிரிவினர் இன்று மாலையே தமது முடிவினை அறிவிக்க உள்ள நிலையில் கட்டுப்பாட்டினை மீறி இன்று இ.போ.ச பேருந்து சேவை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்
எனினும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் அண்மையில் திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இடம் பெறுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மாத்திரம் யாழ் நகரப்பகுதியில் சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறப்படாது இடம்பெறுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது