கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவான வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் பதிவு!

ec678b9a60e170ed34b29150932b1c26 XL 1
ec678b9a60e170ed34b29150932b1c26 XL 1

கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவான வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 36.2 செல்சியஸ் பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை வேளையில் 75 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் ஓரளவு காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.