மணிவண்ணனின் குறித்த வழக்கு எதிர்வரும் யூன்மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

IMG 9615
IMG 9615

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டவர் 2 இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டார். 
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 6ஆம் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய முன் தினம் இரவு வாக்கு மூலம் வழங்க வருமாறு முதல்வர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். 

காவல் நிலையத்தில் சுமார் 06 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். 

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் முற்படுத்தப்பட்டார். 
அதன் போது இரண்டு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவித்த நீதவான் வழக்கினை 6ஆம் மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுதந்திரன் தலைமையில் 25 சட்டத்தரணிகளுக்கு மேல் முன்னிலையானர்கள்.-