அதிவேக நெடுஞ்சாலை அருகில் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று இன்று (10) அதிகாலை விபத்துக்குள்ளாகி தீப்பற்றியுள்ளதாக எல்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவல் அதிவேக நெடுஞ்சாலையின் தீயணைப்பு வாகனங்களினால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பற்றியதால் தாங்கி ஊர்திக்கு பாரிய சேதாரம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதியின் உதவியாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.