புத்தாண்டை முன்னிட்டு 5000 ரூபா வழங்க தீர்மானம்

5000
5000

புத்தாண்டை முன்னிட்டு சமுர்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றினை வெளியிட்டு அதனை குறிப்பிட்டுள்ளார்.