கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

202104080230578396 Corona for 6976 newcomers in Karnataka SECVPF
202104080230578396 Corona for 6976 newcomers in Karnataka SECVPF

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 228 பேரில் 58 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56 பேர், கம்பஹா மாவட்டத்தில் 27 பேர், இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 10 பேர் அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர், பதுளை, கிளிநொச்சி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 45 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.