ரூ.1000 பெற்றுக் கொடுத்துள்ளோம் – ஜீவன்

JEEVAN 720x380 1
JEEVAN 720x380 1

1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று (9) கொட்டகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் நீண்டநாள் கனவாகவும் எமது வேண்டுகோளுக்கு இணங்க அடிப்படை சம்பளமாக 1000 ரூபா கிடைத்துள்ளது .இது சாத்தியமாவதற்கு காரணமான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தோட்ட துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் விசேடமாக தொழில் அமைச்சர் நிமால் சிறிப்பாலடி சில்வா அவர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த ஒரு வருடகாலமாக நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு முக்கியதுவம் வழங்கி இன்று 1000 ரூபா பெற்றுக்கொடுத்துள்ளோம்.எனவும் குறிப்பிட்டுள்ளார்.