கடலில் சிக்கிய போத்தல் பானத்தை அருந்திய மற்றுமொருவர் பலி!

istockphoto 1087837572 170667a
istockphoto 1087837572 170667a

வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடலில் மிதந்து வந்த மதுபானப் போத்தலில் இருந்த பானத்தை அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனியாகவே வசித்து வந்த நிலையில் வீட்டின் உட்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம், குடமியனை சேர்ந்த சின்னத்தம்பி இராமேஸ்வரன் (41-வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவற்துறையினர் தெரிவித்தனர்.