வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடலில் மிதந்து வந்த மதுபானப் போத்தலில் இருந்த பானத்தை அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனியாகவே வசித்து வந்த நிலையில் வீட்டின் உட்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம், குடமியனை சேர்ந்த சின்னத்தம்பி இராமேஸ்வரன் (41-வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவற்துறையினர் தெரிவித்தனர்.