புனித ரமழான் நோன்பு நாளை முதல் ஆரம்பம்

unnamed 1 4
unnamed 1 4

நாளை முதல் முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.

ஹிஜ்ஜிரி 1442 ரமழான் மாதத்திற்கான, தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்றது.

நேற்று தலைப்பிறை தென்படாதமையால், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எஸ்.எம். தஸ்லிம் மௌலவி தெரிவித்துள்ளார்.