தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியை கடைபிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.