கொழும்பிற்கு பிரவேசிக்கவுள்ள பொதுமக்களின் நலன் கருதி நாளை முதல் தூர இடங்களில் இருந்து தலைநகருக்கான தொடருந்து சேவைகள் வழமைபோல இடம்பெறும் என தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை(19) முதல் சகல தொடருந்து சேவைகளும் வழமை போல இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.