வவுனியாவில் சித்திரை புதுவருடதினமான இன்று இடம்பெற்ற அடிதடி மற்றும் விபத்துச் சம்பவங்களில் 15 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக செட்டிகுளம், ஓமந்தை, சிவபுரம் மற்றும் அவிசதப்பிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
அவற்றில் அடிதடிச்சம்பங்களே அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அனேகமானவை மதுபோதையால் ஏற்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.