கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களால் 10 பேர் பலி

ajith2
ajith2

நாட்டில் நேற்றைய தினம் 121 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று இடம்பெற்ற இந்த விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்துக்களால் 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.