வவுனியா போக்குவரத்து காவல்துறையினரால் புதுவருட தினத்தன்று மது போதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை காவல் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
வவுனியா தலைமை காவல் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப்பகுதிகளில் புதுவருட தினத்தன்று விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல், மற்றும் வீதி ஒழுங்குகளை பேணாமல் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.