தமிழ் மக்களை அச்சுறுத்தும் சுவரோவியங்கள்!!

wall painting
wall painting

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் வரையப்படுகின்ற வீதிச் சுவர் சித்திரங்கள் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 18ம் திகதி ஜனாதிபதி பதவியேற்பினையடுத்து தென்னிலங்கை உட்பட பல்வேறு பிரதேசங்களில் சுவர் ஓவியங்கள் வரையப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் புலம்பெயர் தமிழ் மக்களைப் பார்த்து கழுத்தை அறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் ஓவியம் வரையப்பட்டுள்ளதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.