மன்னார் மாவட்டத்தில் இன்று (15) காலை கடும் மழையுடன் கூடிய வானிலை காணப்பட்டதால் மக்களிம் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான வானிலை காணப்பட்டதாகவும் மேலும் இன்று பெய்த மழை காரணமாக மன்னார் தீவு பகுதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில வீதிகளிலும் நீர் தேங்கி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.