பொறியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்!

1596162712756
1596162712756

வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட பிரைட் எனும் பெயர் கொண்ட நாயொன்று தலை சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கெக்கிராவயில் பதிவாகியுள்ளது.

சித்திரைப் புத்தாண்டன்று பிரைட்டின் உரிமையாளர் அதனை வீட்டில் விட்டுச் சென்றிருந்த வேளையில் மிருகங்களை வேட்டையாடும் ‘ஹக்கபட்டஸ்’ எனும் பொறியில் சிக்குண்ட நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர் நாயின் உரிமையாளரால் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக ‘ஹக்கபட்டஸ்’ எனும் பொறி வைக்கப்பட்டிருந்ததாக மேலதிக விசாரணைகளின்போது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தனது வீட்டைச் சுற்றி பாதுகாப்பான முறையில் முட்கம்பி வேலிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தனது காணிக்குள் பிரவேசித்து அப்பொறியினை வைத்தது காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்கு என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.