வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தில் சிவத்தொண்டர் லயன நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞபகார்த்த அறநெறிப் பாடசாலை இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.
ஆதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையினரால் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சிவத்தொண்டர் லயன் நாகேந்திரம் சுபாதர்ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாகேந்திரம் அகிலேஸ்வரி குடும்பத்தினரினால் இவ் அறநெறி பாடசாலை நிர்மாணிக்கப்பட்டது.
நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலமையில் இடம்பெற்ற அறநெறி பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நகரசபை உறுப்பினர்களான சந்தரகுலசிங்கம், லக்சனா நாகராஜன் மற்றும் முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்டிடத்தின் நினைவுக்கல்லினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் திறந்து வைத்தார்.