மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Death body 720x450 1
Death body 720x450 1

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, குருக்கள் மடம் பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் தென்னை மரத்திலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேவாலய வீதி, மகிளூரைச் சேர்ந்த 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்னம் பதநீர் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறிய நபரை மிக நீண்ட நேரமாகியும் காணவில்லையென தேடியபோது, தென்னை மரத்தின் வட்டுக்குள் இறந்துகிடந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த நபர் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.