வத்தளையில் கைப்பற்றப்பட்டிருந்த போதைப்பொருள் நிபுணவினுடையது

pothai
pothai

வத்தளை பகுதியில் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருள், துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் வர்த்தகரும், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவருமான நிபுண என்பவருக்கு சொந்தமானது தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேநேரம் இலங்கைக்கு அனுப்பட்டுள்ள மேலும் 100 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் வெளிநாட்டில் உள்ள ரூபன் மற்றும் குடுலால் ஆகியோர் உள்ளதாக முன்னதாக தெரியவந்தது.

ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்த பகுதியில் இதற்கு முன்னர் சுமார் 125 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

100 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய குறித்த போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.