போலி தேரர் தொடர்பில் விசாரணை – அஜித் ரோஹண

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

தம்மை தேரர் என்று கூறிக்கொண்டு மீகலேவ – ரெஸ்வேஹர ரஜமஹா விகாரைக்கு சென்று அங்கிருந்து தப்பி சென்ற நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

குறித்த நபர் தம்மை தேரர் என்று கூறி நேற்று பிற்பகல் குறித்த விகாரைக்கு சென்றுள்ளார்.

அவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் குறித்த நபர் அருகிலிருந்த கஹகல்ல வனப்பகுதிக்குள் தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மீகலேவ காவல்துறைக்கு அறிவிக்குமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார்