மகன் தாக்கியதில் தந்தை பலி!

Death body 720x450 1
Death body 720x450 1

மகனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி 53 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 20 வயதான சந்தேக நபர் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக மகனால் தந்தை தாக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பிள்ளைகளால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சங்கடமான நி்லைமைகளை தவிர்த்துக் கொள்வதற்கு குடும்பங்களின் ஏனைய உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.