கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

kaithu

களுத்துறை பொந்துபிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர், பிரதிகாவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

களுத்துறை குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த கைத்துப்பாக்கியுடன் 6 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொந்துபிட்டி பகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படும் நிலையில் இன்று அவர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.