வழமைக்கு திரும்பிய கரையோர தொடருந்து சேவைகள்!

train
train

தொடருந்து தடம்புரண்டிருந்ததால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று காலி தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் தடம்புரண்டதால் கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இயக்கப்பட்டிருந்த விசேட தொடருந்து ஒன்றே தடம்புரண்டிருந்ததாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் தடம்புரண்டிருந்த தொடருந்து மீள தடமேற்றப்பட்டுள்ளதால் கரையோர தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.