கிளிநொச்சியில் இயற்கை முறையில் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை!

unnamed 2 1 720x375 1
unnamed 2 1 720x375 1

இயற்கை முறையான விவசாயத்தை மேம்படுத்தும் நோக்குடன் நஞ்சற்ற உணவுகளை பெற்றுக்கொள்ளும் முறையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கான 7 வகையான தானியம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி ஜெயபுரம் கடல் தொழிலாளர் சங்க சமாச நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது.

30 இளைஞர்களுக்கு இயற்கை முறையான விவசாயத்தை மேம்படுத்தும் நோக்குடன் நஞ்சற்ற உணவுகளை பெற்றுக்கொள்ளும் முறையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கான 7 வகையான தானியம் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்களும் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் தலைவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.