இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 261 பேர் இன்று பூரணமாக குணமடைவு!

202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF 1
202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 261 பேர் இன்று (19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,374 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரையில் 97,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் அனேகமானோர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 618 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.