லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து!

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர காவல்து​றையினர் தெரிவிக்கிறனர்.

கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்து​றையினர் தெரிவிக்கின்றனர்.

20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.