மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் சீருடை

1 61
1 61

பாடசாலை விடுமுறைக்கு முன் சீருடைகளை விநியோகிக்க முடியாமல் போன மேல் மாகாண பாடசாலைகளுக்கு, அடுத்த வாரத்திற்குள் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு மாத்திரமே சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக உள்நாட்டு தொழிலதிபர்கள் எதிர்கொண்ட சில சிக்கல்களினாலேயே சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.